நுரையீரலை கண்ணை போல காத்து ,புண்ணையும் குணமாக்கும் இந்த பழம்

 

நுரையீரலை கண்ணை போல காத்து ,புண்ணையும் குணமாக்கும் இந்த பழம்

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் முதல் உடலின் மற்ற உறுப்புகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதனை வாங்கிச் சுவையுங்கள்

நுரையீரலை கண்ணை போல காத்து ,புண்ணையும் குணமாக்கும் இந்த பழம்

மூச்சுக்குழாய் அழற்சி

அன்னாசிப் பழத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையால், நோய் தொற்றால் நுரையீரலில்  ஏற்பட்டுள்ள வீக்கம், புண்  போன்றவை குணமாகிவிடும்.

நுரையீரலை கண்ணை போல காத்து ,புண்ணையும் குணமாக்கும் இந்த பழம்

நோயெதிர்ப்பு சக்தி

அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.

சைனஸ், தொண்டைப்புண்

சைனஸ், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உள்ளது. இதற்கு அதில் வளமாக நிறைந்துள்ள புரோமெலைன் தான் காரணம்.

செரிமானம்

செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.

சளி மற்றும் இருமல்

அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். அதிலும் சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகளை வலிமையடையும்

அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது.

ஆர்த்ரிடிஸ்

அன்னாசிப்பழத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், இதனை ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் உட்கொண்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, மூட்டுகள் வலிமையடையும்.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும். வைட்டமின் ‘சி’ யுடன் ‘மாங்கனீஸ்’ தாதுப்பொருள், வைட்டமின் ‘பி’, தையாமின் போன்றவையும் இப்பழத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள க்வீன் ஸ்டான்ட் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அன்னாசிப்பழம் மார்பகம், சுவாசப்பை, ஆசனவாய், ஓவரிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை உருவாகாமல் கட்டுப்படுத்த பெரிதளவில் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

மூச்சுக்குழாய் அழற்சி

அன்னாசிப் பழத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள வீக்கம், காயம் போன்றவை குறைந்துவிடும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அன்னாசியை டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியத்தால், இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

வயிற்றுப்புழுக்கள்

அன்னாசிப்பழத்தில் செரிமான நொதியான ப்ரோமெலைன் உள்ளது. எனவே அன்னாசியை டயட்டில் சேர்க்கும் போது, அது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும்.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு… ‘ப்ரோமிலைன்’ என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. ‘ப்ரோமிலைன்’ உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை ‘ப்ரோமிலைனு’க்கு உண்டு.

அன்னாசிப் பழத்தைத் தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் ‘ப்ரோமிலைன்’ உள்ளது.