இதை படிச்சி ,உங்க கல்லீரல் கண்டிஷன தெரிஞ்சிக்கிட்டு ,டாஸ்மாக்கை தேடி போங்க.

 

இதை படிச்சி ,உங்க கல்லீரல் கண்டிஷன தெரிஞ்சிக்கிட்டு ,டாஸ்மாக்கை தேடி போங்க.

இன்று நிறைய பேர் மதுவுக்கு அடிமையாகி தங்களின் கல்லீரலை கெடுத்துக்கொண்டு ,இறக்கிறார்கள் .அதனால் இந்த அறிகுறிகளை வைத்து உங்க ஈரல் கண்டிஷன தெரிஞ்சிக்கோங்க .

இதை படிச்சி ,உங்க கல்லீரல் கண்டிஷன தெரிஞ்சிக்கிட்டு ,டாஸ்மாக்கை தேடி போங்க.

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

சரும அரிப்பு

உடலில் திடீரென அரிப்பு ஏற்படும் .இதற்கு கல்லீரல் செயல்பாட்டில் குறைகளிருந்து ,நிறைய நச்சுக்கள் தங்கி விட்டால் இப்படி அரிப்புகள் ஏற்படும்

மஞ்சள் காமாலை

கல்லீரலில் நிறைய மஞ்சள் நிற பித்த நீர் தங்கி விட்டால் உடல் மஞ்சள் நிறமாக மாறி ,மஞ்சள் காமாலை நோய் ஏற்படும்

வாந்தி பேதி

கல்லீரல் வேலை செய்யாததால் ,உணவு செரிமானம் ஆகாமல் ,பசி எடுக்காமல் ,வாந்தி பேதி ஏற்படும்

வயிறு வீக்கம்

கல்லீரல் மிகவும் மோசமான நிலையை எட்டி விட்டால் வயிறு வீங்க ஆரம்பித்துவிடும் .