எஸ்.பி.பி ஐசியூவிலேயே தொடர் சிகிச்சை- மருத்துவமனை நிர்வாகம்

 

எஸ்.பி.பி ஐசியூவிலேயே தொடர் சிகிச்சை- மருத்துவமனை நிர்வாகம்

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட 20 நாட்களில் எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அதன் எதிரொலியாக எஸ்பிபி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

எஸ்.பி.பி ஐசியூவிலேயே தொடர் சிகிச்சை- மருத்துவமனை நிர்வாகம்

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளதாகவும், ஐசியூவில் உள்ள எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.