சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தொற்று நீங்கி வீடு திரும்பினர்!

 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தொற்று நீங்கி வீடு திரும்பினர்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கும் கடந்த 20 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தொற்று நீங்கி வீடு திரும்பினர்!

நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக தன்னுடைய குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செயலாளர் மனைவி மருத்துவர் கிருத்திகா, அவரது மகன், கிருத்திகாவின் பெற்றோர் உள்ளிட்ட 4 பேரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.