“ஒரு ஐபிஎல் கப் கூட வாங்கல” – விராட்டை சீண்டிய சுரேஷ் ரெய்னா!

 

“ஒரு ஐபிஎல் கப் கூட வாங்கல” – விராட்டை சீண்டிய சுரேஷ் ரெய்னா!

இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வாங்கவில்லை என்று கூறுகிறீர்கள்; அவரால் இன்னும் ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நக்கலடித்துள்ளார். இதுதொடர்பாக சுரேஷ் ரெய்னா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விராட் கோலி சர்வதேச அளவில் நம்பர் ஒன் கேப்டன் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கோலி நிகழ்த்திய சாதனைகளே அதற்கு சாட்சி. அதிலிருந்தே நாம் அவர் எப்பேர்பட்ட கேப்டன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

“ஒரு ஐபிஎல் கப் கூட வாங்கல” – விராட்டை சீண்டிய சுரேஷ் ரெய்னா!

சர்வதேச கிரிக்கெட்டிலும் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக தன்னை நிரூபித்துக் காட்டி பல்வேறு சாதனைகள் புரிந்திருக்கிறார் கோலி. ஆனால் அவர் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்லவில்லையே என்று கேட்கிறீர்கள். ஐபிஎல் தொடரில்கூட கோலியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதைத் தவறாக சொல்லவில்லை.

“ஒரு ஐபிஎல் கப் கூட வாங்கல” – விராட்டை சீண்டிய சுரேஷ் ரெய்னா!

கோலிக்கு இன்னும்கூட சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அடுத்ததாக டி20 உலகக் கோப்பை வருகிறது. அதன்பின் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவிருக்கிறது. இவை இரண்டிலும் கோலி தன்னுடைய திறமையை நிரூபிக்க நிச்சயமாக வாய்ப்பளிக்கலாம். இந்த இரு போட்டிகளிலும் இறுதிப் போட்டியை அடைவது என்பது சாதாரணமானது அல்ல. சில தவறுகள் செய்தாலும் வாய்ப்பை இழந்துவிடுவோம்” என்றார்.