திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றதால் இந்த விபரீத முடிவு! சினிமா திரையரங்கில் பச்சிளம் குழந்தையை எரித்துக்கொன்ற கொடூரத்தாய்!

 

திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றதால் இந்த விபரீத முடிவு! சினிமா திரையரங்கில் பச்சிளம் குழந்தையை எரித்துக்கொன்ற கொடூரத்தாய்!

திரையரங்குகள் எல்லாம் கொரோனா தொற்றின் காரணமாக மூடிக்கிடக்கின்றன. இது ஒருவகையில் அந்த கொடூர தாய்க்கு வசதியாக அமைந்துவிட்டது.

மூடிக்கிடந்த சங்கரன்கோவில் கோமதிசங்கர் திரையரங்கில் இருந்து சந்தேகப்படும் படியாக புகை வந்ததைக்கண்டு, திடுக்கிட்டவர்கள் உள்ளே சென்று பார்த்ததும் அதிர்ந்து போனார்கள்.

அங்கே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை உடற்கூராய்வு நடத்த அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றதால் இந்த விபரீத முடிவு! சினிமா திரையரங்கில் பச்சிளம் குழந்தையை எரித்துக்கொன்ற கொடூரத்தாய்!

சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்தக்குழந்தை சங்கரன்கோவில் சங்குபுரம் 6வது பகுதியைச்சேர்ந்த கோமதி(வயது21)யின் குழந்தை என்பது தெரியவந்தது.

பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளக்குழந்தையை பெற்ற தாயே ஏன் எரித்துக்கொலை செய்ய வேண்டும் என்று போலீசார் மேலும் விசாரித்ததில், கோமதி ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலனுடன் நெருக்கமாக இருந்து வந்த காரணத்தினால் கர்ப்பம் ஆகியிருக்கிறார் கோமதி. விசயம் வெளியே தெரியாமல் இருக்க கர்ப்பத்தை கலைக்க குடும்பத்தினர் முயன்றிருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட நாட்களை கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியவில்லை. இதனால் கோமதி கர்ப்பமாக இருக்கும் விசயத்தை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்ததும் கொன்றுவிடலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றதால் இந்த விபரீத முடிவு! சினிமா திரையரங்கில் பச்சிளம் குழந்தையை எரித்துக்கொன்ற கொடூரத்தாய்!

அதே மாதிரி குழந்தை பிறந்ததும், நான்கு நாட்கள் கழித்து, ஆள் நடமாட்டமில்லாத மூடிக்கிடந்த திரையங்க வளாகத்திற்குள் சென்று, தாய் இந்திராணியுடன் சேர்ந்து குழந்தையை உயிருடன் எரித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

முழுவதும் உடல் எரியாமல் கிடந்ததால் போலீசில் சிக்கிவிட்டார் கொடூர தாய் கோமதி.

முறைதவறி பெற்றாலும் அது அந்த பெண்ணைப்பொறுத்தவரையிலும் பெற்றெடுத்த குழந்தைதானே. அதை எரித்துக்கொல்ல எப்படி மனசு வந்தது. பாவி கல்நெஞ்சக்காரி என்று அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.