#happybirthdayTHALAPATHY ‘பிகில்’ கதை குறித்து ‘திகில்’ கிளப்பும் நடிகை… எச்சரிக்கும் உதவி இயக்குனர்கள்..!?

 

#happybirthdayTHALAPATHY ‘பிகில்’ கதை குறித்து ‘திகில்’ கிளப்பும் நடிகை… எச்சரிக்கும் உதவி இயக்குனர்கள்..!?

பிரபல நடிகை அதிதி பாலன்  குறித்த ஹாட் டாப்பிக்  ஒன்று வெளியாகி அவரது ரசிகர்கள்  மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை:  பிரபல நடிகை அதிதி பாலன்  குறித்த ஹாட் டாப்பிக்  ஒன்று வெளியாகி அவரது ரசிகர்கள்  மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த  அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து அதிதி பாலன்  வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதனால் அதிதி பாலன்  குறித்து  எந்த ஒரு செய்தியும் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் குழப்பத்திலிருந்து வந்தனர்.  

aditi

இருப்பினும் உதவி இயக்குநர்கள்  வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் அதிதி பாலன். அதாவது அதிதி பாலன் படம் தயாரிப்பதாகச் சொல்லிக் கதை கேட்பார் அப்படி கேட்டால் யாரும் இவரிடம் கதை சொல்ல வேண்டாம் என்று  உதவி இயக்குநர்கள் சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜை தட்டிவிட்டு அனுப்பி எச்சரித்து  வருகின்றனர். காரணம் இவரிடம் சொல்லப்படும்  கதை, இவர் மூலமாக  ஒரு பெரிய இயக்குநரால் திருடப்பட்டுள்ளது. அந்த கதையில் பெரிய ஹீரோ, பெரிய கம்பெனி என படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே இவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று முடிகிறது அந்த மெசேஜ்.

aditi

இந்த வாட்ஸ்அப் மெசேஜ்படி பார்த்தால் சமீபத்தில் நீதிமன்றத்தை நாடிய உதவி இயக்குநர் என்றால் அவர் செல்வா தான். பிகில்  என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின்  63 படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படம் பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ‘பிகில்’  திரைப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர்  செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருவேளை அதற்கு முக்கிய காரணம்  நம்ம அருவி நாயகியா இருக்குமோவென்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

நாங்க சொல்லலப்பா வாட்ஸ்அப் மெசேஜ் சொல்லுது…(நமக்கு எதுக்கு  வம்பு நம்ம இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்)