கிரக தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்!

 

கிரக தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்!

செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயரை வழிபட ஏற்ற நாள் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு வெற்றி, நலம், ஆரோக்கியம், அமைதி, தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் அவதாரம் ஆஞ்சநேயர், விஷ்ணுவின் தீவிர பக்தர். எனவே, இவரை வணங்கினால் சிவன் மற்றும் விஷ்ணுவின் அனுக்கிரகம் நமக்குக் கிடைக்கும்.

கிரக தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்!

மிக எளிய அனுமன் மூல மந்திரமான, “ஓம் ஹனுமந்தே நமஹ” என்று சொன்னால் கூட மிகப்பெரிய பலனைப் பெறலாம். கிரக தோஷம் நீங்க பின்வரும் மந்திரத்தைச் சனிக்கிழமைகளில் சொல்லி வர வேண்டும்.

மந்திரம்:

அஞ்ஜனா கர்ப ஸம்பூதம்

குமாரம் ப்ரம்மச் சாரினாம்

துஷ்ட கிரஹ விநாஸாய

ஹனுமந்த முபாஸ்மஹே

இந்த மந்திரத்தை சனிக் கிழமைகளில் காலை 8 முதல் 9.30க்குள் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று எலுமிச்சை பழத்தில் நெய் ஊற்றி விளக்கேற்றி 108 முறை சொல்லி வழிபட வேண்டும். உளுந்து, வெல்லத்தை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் கிரக தோஷம் நீங்கி நன்மை பெருகும்.