வில்லிவாக்கம், கொளத்தூரில் கை சுத்திகரிப்பான் இயந்திரம் – மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்பாடு

 

வில்லிவாக்கம், கொளத்தூரில் கை சுத்திகரிப்பான் இயந்திரம் – மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்பாடு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் வில்லிவாக்கம், கொளத்தூரில் கை சுத்திகரிப்பான் இயந்திரம் வைக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியதால் அக்கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று (மே 30) வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், கால்களால் இயக்கப்படும் கிருமி நாசினி இயந்திரத்தை வைத்தனர்.

வில்லிவாக்கம், கொளத்தூரில் கை சுத்திகரிப்பான் இயந்திரம் – மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்பாடு

இதற்கான முன்னெடுப்பை மாவட்டச் செயலாளர் பிரியதர்ஷினி உதயபானு, நகரச் செயலாளர்கள் கிஷோர் வின்சென்ட், ஜிம்.கே.மாடசாமி, திவாகரன், தமிழ்ச்செல்வி வட்டச் செயலாளர்கள் விஸ்வநாதன் மற்றும் ஹரிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.