தேனிலவுக்கு போறாங்க.. எதுக்கு போறாங்கன்னு தெரியாது.. ராகுல், தேஜஸ்வி, சிராக்கை கிண்டலடித்த முன்னாள் முதல்வர்

 

தேனிலவுக்கு போறாங்க.. எதுக்கு போறாங்கன்னு தெரியாது.. ராகுல், தேஜஸ்வி, சிராக்கை கிண்டலடித்த முன்னாள் முதல்வர்

இந்தியாவின் 3 இளவரசர்கள் தேனிலவுக்கு போறாங்க ஆனால் எதுக்கு போறாங்கன்னு தெரியாது என்று ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் சிராக் பஸ்வானை ஜிதன் ராம் மாஞ்சி கிணடல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியாது. அதேபோல் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், எல்.ஜே.பி. தலைவர் சிராக் பஸ்வான் கடந்த சில தினங்களாக வெளியே வரவில்லை. இதனை குறிப்பிட்டு அவர்களை ஜிதன் ராம் மாஞ்சி கிண்டல் செய்துள்ளார்.

தேனிலவுக்கு போறாங்க.. எதுக்கு போறாங்கன்னு தெரியாது.. ராகுல், தேஜஸ்வி, சிராக்கை கிண்டலடித்த முன்னாள் முதல்வர்
ஜிதன் ராம் மாஞ்சி

பீகாரின் முன்னாள் முதல்வரும், எச்.ஏ.எம். கட்சி தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பீகார், இந்தியாவின் 3 யுவராஜ், ராகுல் காந்தி, சிராக் பஸ்வான் அல்லது தேஜஸ்வி யாதவ் இருக்கலாம். நேரம் வரும்போது, மூவரும் எங்காவது தேனிலவுக்கு செல்கிறார்கள். அவர்கள் எதற்காக செல்கிறார்கள், அது தெரியவில்லை.

தேனிலவுக்கு போறாங்க.. எதுக்கு போறாங்கன்னு தெரியாது.. ராகுல், தேஜஸ்வி, சிராக்கை கிண்டலடித்த முன்னாள் முதல்வர்
சிராக் பஸ்வான்

எந்த கட்சியின் கொள்கை சரியானதோ அந்த கட்சிக்கு மக்களுக்கு ஆதரவு கிடைக்கிறது. நமது சமூகத்தின் மக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக மாறுகின்றனர். அதன்பிறகு சமூகத்தின் தேவைகளை மறந்து விடுகிறார்கள். எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் எச்.ஏ.எம். கட்சி போட்டியிடும். நாங்கள் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லியில் எங்கள் வாக்குவங்கியை பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.