குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

 

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

2017 ஆம் ஆண்டு சட்ட பேரவைக்குள் தமிழகத்தில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைப்பதாக கூறி திமுக எம்எல்ஏ-க்கள் குட்காவை கொண்டுவந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் குழு திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

இந்த வழக்கின் விசாரணை முடிவில் குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்டீஸ் அனுப்பவும், அப்படி அனுப்பப்படும் நோட்டீஸில் மனுதாரர்கள் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

இந்நிலையில் குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து மற்று புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்ற தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கொறடா சக்ரபாணி உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். மீண்டும் இதற்கான புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.