சென்னை ராயபுரத்தில் இதுவரை 5,486 பேருக்கு கொரோனா… பீதியில் மக்கள்!
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,515பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Here's the Info Graphic of Total Covid-19 positive cases in Chennai. #Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/GoqUuYa6Cy
— Greater Chennai Corporation (@chennaicorp) June 17, 2020
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரு.வி.க.நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்