“விளையாட போன பேரனால் வெறிகொண்ட பாட்டி” -இரும்பு சங்கிலியால் பேரனை கட்டி வைத்து,முட்டியை உடைத்த பாட்டி கைது..

 

“விளையாட போன பேரனால் வெறிகொண்ட பாட்டி” -இரும்பு சங்கிலியால் பேரனை கட்டி வைத்து,முட்டியை உடைத்த பாட்டி கைது..

பொதுவாக பாட்டிகளுக்கு பேரனைத்தான் எப்போதும் பிடிக்கும் .ஆனால் இங்கு ஒரு பாட்டி வித்தியாசமாக தன்னுடைய பேரனை கட்டிவைத்து தினமும் அடித்து கொடுமை செய்துள்ள காட்சியை கண்டு பலரின் மனம் பதறியது .
“விளையாட போன பேரனால் வெறிகொண்ட பாட்டி” -இரும்பு சங்கிலியால் பேரனை கட்டி வைத்து,முட்டியை உடைத்த பாட்டி கைது..
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நீச்சி மங்லி வட்டாரத்தில் ஒரு மூதாட்டி தன்னுடைய மகள் மற்றும் பேரன் பேத்திகளோடு வசித்து வந்தார் .கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரின் மகள் அவரின் கணவனிடமிருந்து விவகாரத்து பெற்று பாட்டியோடு வந்து விட்டார் .மேலும் அந்த கவலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய அம்மாவிடம் விட்டு விட்டு இறந்து விட்டார் .
அவரின் மகள் இறந்தது முதல் அந்த பாட்டி தன்னுடைய எட்டு வயது பேரனை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்து, தினமும் முட்டியில் ரத்தம் வரும்வரை அடித்து கொடுமைப்படுத்துவார் .இதற்கு என்ன காரணமென்றால் பேரன் விளையாட போகிறானாம் .
இந்த காட்சியை பார்த்து பொறுக்க முடியாத பக்கத்து வீட்டுக்காரர் பால்விந்தர் கவுர் ஜூலை 28ம் தேதியன்று போலீசில் பாட்டி பேரனை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார் .அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நேரில் விசாரணை நடத்த பாட்டியின் வீட்டிற்கு சென்ற போது ,ஒரு அதிர்ச்சியான காட்சியை கண்டு பொங்கி எழுந்தனர் .ஆம் ,அங்கு போலீசார் கண்ட காட்சி நெஞ்சை பதறவைக்கும் .அங்கு அவரின் எட்டு வயது பேரன் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, உடல் முழுவதும் ரத்தம் வழிய துடித்து கொண்டிருந்தான் .இதனால் போலீசார் அந்த சிறுவனை பேரனிடமிருந்து விடுவித்து ,கொடுமை செய்த பாட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

“விளையாட போன பேரனால் வெறிகொண்ட பாட்டி” -இரும்பு சங்கிலியால் பேரனை கட்டி வைத்து,முட்டியை உடைத்த பாட்டி கைது..