தலையில் கால்பந்து பட்டதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

 

தலையில் கால்பந்து பட்டதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி

திருச்சி நகரில் தலையில் கால்பந்து பட்டதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

திருச்சி உறையூர் கல்லறை மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாப்பாயி(85). இவர் கடந்த 11ஆம் தேதி அன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அருகே இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பந்து மூதாட்டி பாப்பாயி தலை பகுதியை பலமாக தாக்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

தலையில் கால்பந்து பட்டதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

அங்கு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பாப்பாயி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கால்பந்து தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.