`வீட்டில் புதையல் இருக்கு; நரபலி கொடுக்கணும்!’- சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி, மகன்

 

`வீட்டில் புதையல் இருக்கு; நரபலி கொடுக்கணும்!’- சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி, மகன்

வீட்டில் புதையல் இருப்பதாக கூறிய சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டியும், மகனும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவம் களக்காடு அருகே நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்தவர் பார்வதி. உங்களது வீட்டில், தங்கப்புதையல் இருக்கிறது. அதனை எடுக்க பூனையை நரபலி கொடுக்க வேண்டும் என பார்வதியிடம், சாமியார் கிரான ராஜன் கூறியுள்ளார். தெரிவித்துள்ளார். சாமியாரின் ஆசைவார்த்தையை நம்பிய பார்வதியும், அவரது மகன் குமரேசனும் நரபலிக்கு செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சாமியார் பூஜை செய்துள்ளார். அப்போது, பூனை தப்பித்து ஓடியுள்ளது. இதையடுத்து, குமரேசனின் மூத்த மகன் அல்லது இளைய மகனை நரபலி கொடுக்க வேண்டும் என சாமியார் கூறியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த குமரேசன் இதற்கு சம்மதித்துள்ளார். பாட்டி பார்வதியும் குழந்தையை நரபலி கொடுக்கலாம் என ஈவு இரக்கமற்ற முடிவை எடுத்துள்ளார்.

`வீட்டில் புதையல் இருக்கு; நரபலி கொடுக்கணும்!’- சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி, மகன்

இதனை அறிந்த குமரேசனின் மனைவி, இருவருடனும் சண்டைப் போட்டுவிட்டு, வீட்டை விட்டு குழந்தையுடன் ஓடிவந்து, அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததை கூறி கதறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சாமியார் கிரான ராஜன், மூதாட்டி பார்வதி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதேபோன்று சாமியார் ராஜன் நரபலி செய்துள்ளாரா என்பது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.