விவசாயிகளிடம் இன்ஸ்டால்மெண்ட் முறையில் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

 

விவசாயிகளிடம் இன்ஸ்டால்மெண்ட் முறையில் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 15ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர், மழைக்கும் மத்தியில் போராட்டத்தை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் உடல் நலக்குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகி உள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

விவசாயிகளிடம் இன்ஸ்டால்மெண்ட் முறையில் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. இதுவரை விவசாய அமைப்புகளுடன் நடத்தப்பட்ட 8 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களின் கோரிக்கையை ஏற்காவிடில் ஒரு வருடம் வரையில் கூட போராட்டத்தை தொடர தேவையான உணவு பொருட்களை வைத்திருக்கிறோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே தங்களின் கோரிக்கைகள் என்றும், வேறு எந்த சலுகைகளையும் பெற நாங்கள் தயாராக இல்லை என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இன்று நடைபெற்ற 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து ஜனவரி 15ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.