ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் பலி

 

ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் பலி

திருச்சி

திருச்சி ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் காட்டூர் கைலாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பிரியதர்ஷன்(34). இவர் திருச்சி புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கிஷோருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று தனது மனைவியின் உறவினருக்கு திதி கொடுப்பதற்காக, அவர் குடும்பத்துடன் திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் படத்துறைக்கு சென்றார். திதி கொடுத்த பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கிஷோர் திடீரென நீரில் மூழ்கி மாயமாகினார்.

ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் பலி

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஶ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பின்னர் மருத்துவர் கிஷோர் பிரியதர்ஷனை, அவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து வந்த ஶ்ரீரங்கம் போலீசார் சடலத்தை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கிஷோரின் பெற்றோர் புகாரின் பேரில் வழக்குப்பவு செய்து விசாரித்து வருகின்றனர்.