ஈரோடு மாவட்டத்தில் இன்று 173 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்!

 

ஈரோடு மாவட்டத்தில் இன்று 173 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அடிப்படையில் இன்று 173 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 173 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்!

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் வாக்குச்சாவடி அடிப்படையில் இன்று வியாழக்கிழமை 173 இடங்களில் நடைபெற உள்ளது. இன்று மொத்தம் 8 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக வாக்குச்சாவடி வாரியாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் மக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த டோக்கன் பெற்றவர்கள் இன்று தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது