திருப்பதி: கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடல் – தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா!

 

திருப்பதி: கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடல் – தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா!

திருப்பதி: தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிந்தராஜ சுவாமி கோவில் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிந்தராஜ சுவாமி கோவிலின் நடை பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாதவாறு 48 மணி நேரம் மூடப்பட்டுள்ளது. கோவிலில் பணிபுரியும் சுகாதார பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருப்பதி தேவஸ்தான ஊழியர் ஆவார்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த சுகாதார பணியாளர் மதுரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காகவும், தனிமைப்படுத்தப்படுவதற்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 48 மணி நேரத்திற்கு பின்பு மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக இந்தக் கோவில் நடை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.