“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

 

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளில் அவர் அரசிடம் கலந்தாலோசிக்காமல் தனித்து செயல்படுவதாக புகார் எழுந்தது. அதுமட்டுமில்லாமல், அவர் மீது ஊழல் புகார்களும் எழுந்திருப்பதால் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்த தமிழக அரசு, குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. அதன் படி, துணை வேந்தர் சூரப்பாவிடம் கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சூரப்பா நேர்மையானவர் என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.