பலான மெஸேஜ் அனுப்பிய பிரின்சிபால் – புகாரளித்த பெண் ஆசிரியைக்கு நேர்ந்த கதி

 

பலான மெஸேஜ் அனுப்பிய பிரின்சிபால் – புகாரளித்த பெண் ஆசிரியைக்கு நேர்ந்த கதி


ஒரு பள்ளியில் வேலை செய்யும் டீச்சருக்கு பலான மெஸேஜ் கொடுத்த ப்ரின்சிபாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

பலான மெஸேஜ் அனுப்பிய பிரின்சிபால் – புகாரளித்த பெண் ஆசிரியைக்கு நேர்ந்த கதி


ராஜஸ்தானில் உள்ள பினாயின் ஏகல்சிங்காவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவேந்திர குமார் சங்கலா என்பவர் ப்ரின்சிபாலாக பணியாற்றுகிறார் . அந்த பள்ளியில் ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஆசிரியையாக பணிபுரிகிறார் .இந்நிலையில் அந்த பிரின்சிபால் சங்களா அந்த பெண்ணுக்கு பல ஆபாசமான வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .
இதனால் அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி பள்ளிக்கு வராமலிருந்தார் .இந்நிலையில் அந்த பிரின்சிபால் அந்த பெண்ணை மீண்டும் பள்ளிக்கு வரவைக்க திட்டமிட்டார்.அதன் படி அந்த பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு ட்ரான்ஸ்பெர் செய்து விட்டு அவர் அந்த பெண்ணை வேலைக்கு வர சொன்னார் .
கர்ப்பமாக இருக்கும் அந்த பெண் உடல்நிலையால் லீவ் போட்டிருந்தார் .ஆனாலும் பள்ளிக்கு வர சொல்லி டார்ச்சர் செய்தார் .இதனால் அந்த பெண் அந்த பிரின்சிபால் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் ஆபாச செய்திகள் போன்றவற்றினை எடுத்து கொண்டு சென்று போலீசில் அவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பிரின்சிபல் சங்களாவை விசாரித்தனர் .அதன் பிறகு அந்த பிரின்சிபால் அந்த டீச்சரை பள்ளியில் மிரட்டியதால் மீண்டும் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது