புரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை!

 

புரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை!

வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை பாம்பன் – கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வனைலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் புயல் கரையை கடக்கும்போது பெரும் மழைக்கும் புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புரெவி புயல்: 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை!

அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரியில் ஒரு சனிக்கிழமை வேலை நாள் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.