ஈரோடு மாவட்டத்தில் 25 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது !

 

ஈரோடு மாவட்டத்தில் 25  பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது !

ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, செப்டம்பர் 16 ஆம் தேதி வரை பல்வேறு குற்றச் செயலில் ஈடுபட்ட 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 25  பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது !

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தொடர்ச்சியாக சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது தொடர் வழிப்பறி, கஞ்சா விற்பனை, அடிதடி, கொலை வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் என பல வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 25  பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது !

சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.