தங்கம் விலை சவரனுக்கு ரூ.321 குறைவு!

 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.321 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்திருக்கிறது.

பொதுமுடக்க காலத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. கொரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் நீட்டித்தால், விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் ரூ.29 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த ஆபரணத்தங்கம், இந்த ஆண்டு ரூ.43 ஆயிரத்தை எட்டியதும், மேலும் உயரும் என கூறப்பட்டதும் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.321 குறைவு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.4,670க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,100க்கும் விற்பனையாகிறது.