தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 85 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை!

 

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 85 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 85 சவரன் நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் அதாவுர் ரகுமான். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நூரேசபா. இவர் நேற்று முன்திம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வாணியம்பாடி நீலிக்கொள்ளை பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 85 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை!

தொடர்ந்து, நேற்று மாலை நூரேசபா வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 85 சரவன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும், கொள்ளையர்கள் வீட்டின் மேல் மாடி கதவை உடைத்து, உள்ளே புகுந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து, உடனடியாக நூரேசபா வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.