முத்தூட் பைனான்ஸில் தங்க நகைகள் கொள்ளை – 6 பேர் கைது!

 

முத்தூட் பைனான்ஸில்  தங்க நகைகள் கொள்ளை –  6 பேர் கைது!

ஒசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முத்தூட் பைனான்ஸில்  தங்க நகைகள் கொள்ளை –  6 பேர் கைது!

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி சாவியை பெற்றுள்ளனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதற்கான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகின. இதில் மர்மக்கும்பல் திரைப்படத்தில் வருவது போல கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முத்தூட் பைனான்ஸில்  தங்க நகைகள் கொள்ளை –  6 பேர் கைது!

இந்நிலையில் ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேர் ஹைதராபாத் அருகே சம்சாத்பூரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 பேரிடம் இருந்து ரூ. 12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகலூர் சாலையில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 24 மணிநேரத்திற்குள் கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.