சங்கரன்கோவில் அருகே தங்க நகை வியாபாரி படுகொலை… 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

 

சங்கரன்கோவில் அருகே தங்க நகை வியாபாரி படுகொலை… 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்க நகை வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டு, உடல் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மலையாங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், குருவிகுளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சங்கரன்கோவில் அருகே தங்க நகை வியாபாரி படுகொலை… 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

தொடர்ந்து, இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையான நபர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நகை வியாபாரி செந்தில்குமார் (40) என்பதும், அவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்தது.

கடந்த 5ஆம் தேதி சங்கரன்கோவிலில் உள்ள ஒருவரிடம் பணம் கொடுத்து, நகையை வாங்க செல்வதாக கூறி சென்ற நிலையில், குளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட எஸ்.பி., கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜாகிர் உசேன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.