ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்!

 

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 அதிகரித்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை, தளர்வுகள் அளிக்கப்பட்டதும் கணிசமாக குறைந்து வந்தது. ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.33 ஆயிரம் வரையில் சரிந்தது. தங்கம் விலை இப்படியே குறைந்து பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தான், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் லாக்டவுன் போடப்படலாம் என கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது தங்கம் விலை உயர்வில் எதிரொலிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4,297க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.34,376க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,500க்கும் விற்பனையாகிறது.