ரஜினி நல்லவர்களை ஆதரிப்பார்- ஜி.கே வாசன்

 

ரஜினி நல்லவர்களை ஆதரிப்பார்- ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று சென்னை அடையாறு டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தா.ம.க. மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “அரசியல் நாகரீகத்தை மு.க.ஸ்டாலின் கடைபிடிக்க வேண்டும். முதல்வரை விவாதத்திற்கு அழைக்கிறார். விவசாயிகள் போராட்டத்தில் இடைத்தரகர் இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி இன்னும் சில தினங்களில் போடப்படும் என்பதால் இது தமிழக மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். கொரோனா தடுப்பூசியில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மக்களுக்குபயத்தை ஏற்படுத்த வேண்டாம்.

ரஜினி நல்லவர்களை ஆதரிப்பார்- ஜி.கே வாசன்

கட்சியின் பலத்திற்கு ஏற்ற இடங்களை கூட்டணியில் கேட்டு பெறுவோம். ரஜினியின் ஆதரவு பிற கட்சிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலில் நல்லவர்களை ஆதரிப்பார் என நினைக்கிறேன். சட்டமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் குரல் ஒலிக்கும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்போம். சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு தனி சின்னத்தில் போட்டியிடுவோம்” எனக் கூறினார்.