திருமணமாகி 2 குழந்தைகளுடன் காதலி : தூக்கில் தொங்கிய காதலன் ; ஆன்லைன் காதலால் நேர்ந்த சோகம்

 

திருமணமாகி 2 குழந்தைகளுடன் காதலி : தூக்கில் தொங்கிய காதலன் ; ஆன்லைன் காதலால் நேர்ந்த சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்ரின். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் சேர்ந்த பூபதி என்பவருக்கும் யோயோ செயலின் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. அம்ரின் திருமணமானவர் என்பதை மறைத்து கல்லூரி மாணவி என்று பொய் சொல்லி பூபதியுடன் பழகி வந்துள்ளார். இவர்களின் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.

திருமணமாகி 2 குழந்தைகளுடன் காதலி : தூக்கில் தொங்கிய காதலன் ; ஆன்லைன் காதலால் நேர்ந்த சோகம்

இதனால் கடந்த 6 மாத காலமாக அம்ரின் மற்றும் பூபதி இருவரும் சமூக வலைதளத்தில் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு காதலியை சந்திக்க அம்ரின் வீட்டிற்கு பூபதி வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. கணவன் வெளியூருக்குச் சென்று இருந்ததால் பூபதியை சமாதானம் செய்து வீட்டிலேயே தங்கவைத்துள்ளார் அம்ரின். இதையடுத்து பூபதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு கடைக்கு சென்றுள்ளார் அம்ரின். திரும்பி வந்து பார்த்தபோது காதலன் பூபதி தூக்கில் சடலமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அம்ரின் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 2 குழந்தைகளுடன் காதலி : தூக்கில் தொங்கிய காதலன் ; ஆன்லைன் காதலால் நேர்ந்த சோகம்

பூபதியின் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் தாலி மற்றும் செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பூபதி காதலியை திருமணம் செய்து கொள்ள நினைத்து வந்ததால் ஏமாற்றம் அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.