“வாராவாரம் வர்ஷாகிட்ட வந்து போறியாமே ” -காட்டிக்கொடுத்த காதலியால் வந்த வினை

 

“வாராவாரம் வர்ஷாகிட்ட வந்து போறியாமே ” -காட்டிக்கொடுத்த காதலியால் வந்த வினை

தன்னுடைய தங்கையை காதலிக்கும் காதலனை அவரின் சகோதரனுக்கு பிடிக்காததால், அவரை அனைவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியை உலுக்கியுள்ளது

“வாராவாரம் வர்ஷாகிட்ட வந்து போறியாமே ” -காட்டிக்கொடுத்த காதலியால் வந்த வினை

வடக்கு டெல்லியின் வஜிராபாத்தில் 24 வயதான சாஹில் என்பவரும் வர்ஷா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர் .வர்ஷா அங்குள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு தங்கியுள்ளார் .இந்நிலையில் வர்ஷாவின் அண்ணன் ஆகாஷுக்கு, தன்னுடைய தங்கையை சாஹில் காதலிப்பது பிடிக்கவில்லை ,இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது .
ஆனால் ஷாகிளுடன் அவரது தங்கை ஒவ்வொரு வாரமும் வீக் எண்டில் ஊர் சுற்றியுள்ளார் .அதனால் இந்த விவகாரம் பற்றி பேசுவதற்கு தன்னுடைய தங்கையையும் அவரின் காதலனையும் வியாழக்கிழமையன்று அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு ஆகாஷ் வரசொல்லியுள்ளார் .அப்போது அங்கு ஆகாஷுடன் அவரின் நண்பர் அலியும் காத்துக்கொண்டிருந்தார் .அந்த நேரம் ஷாஹில் மற்றும் வர்ஷா அங்கே வந்ததும் அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர் ,அப்போது அவர்கள் அனைவருக்கும் மது போதை தலைக்கேறியதும் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் முற்றியுள்ளது .
அந்த நேரம் ஷாகில் அவரின் காதலி வர்ஷாவை அவரின் அண்ணன் எதிரிலேயே கட்டியணைத்துள்ளார் .இதனால் கோபமுற்ற வர்ஷாவின் சகோதரர் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து ஷாகிலை பெல்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்கள் .பிறகு அவரின் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு அவரின் காதலி உள்பட அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள் .பிறகு போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் ஷாகிலின் பிணத்தை கைப்பற்றி ,அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் ஷகிலை கொன்ற அவரின் காதலி மற்றும் அவரின் சகோதரர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

“வாராவாரம் வர்ஷாகிட்ட வந்து போறியாமே ” -காட்டிக்கொடுத்த காதலியால் வந்த வினை