மீண்டும் ஒரு சுவாதி? – பட்டப்பகலில் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மாணவி குத்திக்கொலை!

 

மீண்டும் ஒரு சுவாதி? – பட்டப்பகலில் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மாணவி குத்திக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாயிலில் நின்று கொண்டிருந்த ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியிருக்கிறார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மீண்டும் ஒரு சுவாதி? – பட்டப்பகலில் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மாணவி குத்திக்கொலை!

ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவியின் பெயர் ஸ்வேதா என்பதும் இளைஞரின் பெயர் ராமு என்றும் தெரியவந்துள்ளது. காதல் விவகாரமாக இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மீண்டும் ஒரு சுவாதி? – பட்டப்பகலில் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மாணவி குத்திக்கொலை!

2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியது. கொலைக் குற்றவாளியாக ராம்குமார் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இச்சூழலில் மீண்டும் இதுபோல ஒரு கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.