‘வீட்டில் அடைத்து வைத்து’ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்!

 

‘வீட்டில் அடைத்து வைத்து’ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்!

மதுரை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இத்தகைய கொடூரமான செயலை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை அருகே 14 வயது சிறுமியை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வீட்டில் அடைத்து வைத்து’ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்!

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுவனை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியை தனக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறிய சிறுவன், சிறுமியின் தாயாரையும் தாக்கியிருக்கிறார். இந்த நிலையில், சிறுமியை கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

‘வீட்டில் அடைத்து வைத்து’ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்!

மேலும், சிறுமியின் தாயாரை தாக்கியதாகவும், திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், சிறுவனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.