“கணக்கு போடும்போது கண்டவனோடு இருக்க கூப்பிடுறீங்களே..” -ஆன் லைன் வகுப்பில் மாணவிக்கு கொடுமை

 

“கணக்கு போடும்போது கண்டவனோடு இருக்க கூப்பிடுறீங்களே..” -ஆன் லைன் வகுப்பில் மாணவிக்கு கொடுமை


ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவியை பலான வேலைக்கு அனுப்ப சொல்லி மெஸேஜ் வந்ததால் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் போசாரியைச் சேர்ந்த ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜூம் ஆப் மூலம் கல்வி கற்று வருகிறார் .அதனால் அவரின் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அந்த பெண்ணோடு சேர்த்து பல மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு அந்த ஆப் மூலம் பாடம் நடத்தி வருகிறார்கள் .இந்நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி ஆன் லைன் வகுப்பு நடக்கும்போது இடையிடையே ஆபாச மெஸேஜ்களை அனுப்பி அவரை படிக்க விடாமல் செய்து வந்தார்கள் .
மேலும் அவரின் தந்தையிடம் இந்த ஆபாச மெஸேஜ் பற்றி கூறிய போது அவர் அந்த பள்ளியின் நிர்வாகத்திடம் இது பற்றி கூறினார் .அவர்கள் அந்த மெஸேஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த மெஸேஜ் வந்த நம்பரை நோட் பண்ணிக்கொண்டு அந்த நபரை பற்றி விசாரிக்க தொடங்கினார்கள் .இந்நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணின் போனுக்கு ஒரு மெஸேஜ் வந்துள்ளது அதில் தாங்கள் அனுப்பும் நபரோடு தங்களின் மகளை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் .அப்படி அனுப்பவில்லையென்றால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோமென்றும் ,மீறி அனுப்பவில்லையென்றால் உங்களை தற்கொலை செய்ய வைப்போமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .அதன் காரணமாக அந்த மெஸேஜை அந்த பள்ளியில் காண்பித்து அவர்கள் புகாரளித்தார்கள் .மேலும் அந்த ஆன் லைன் வகுப்ப்பிலிருந்து விலகி விட்டார்கள் .அந்த ஜூம் ஆப்பை நீக்கி விட்டார்கள் .சிறுமியின் தந்தை மற்றும் (பள்ளி) தலைமை ஆசிரியருக்கும் அவரது மின்னஞ்சல் ஐடியில் அவரைப் பற்றி ஆபாச செய்திகள் வந்ததாக தெரிவித்தனர். இந்த செய்திகள் ஜூலை 15 முதல் டிசம்பர் 12 வரை இடைவிடாது நிகழ்ந்தன.அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் எம்ஐடிசி போசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“கணக்கு போடும்போது கண்டவனோடு இருக்க கூப்பிடுறீங்களே..” -ஆன் லைன் வகுப்பில் மாணவிக்கு கொடுமை