‘தவறாக நடக்க முயன்ற இளைஞரை’ வெட்டிக் கொன்ற இளம்பெண்!

 

‘தவறாக நடக்க முயன்ற இளைஞரை’ வெட்டிக் கொன்ற இளம்பெண்!

திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞரை இளம்பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வசித்து வந்தவர் அஜித் குமார்(25). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் கௌதமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று அஜித்குமார் கௌதயிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார். ஆத்திரமடைந்த கௌதமி, அஜித்குமார் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை அங்கேயே வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

‘தவறாக நடக்க முயன்ற இளைஞரை’ வெட்டிக் கொன்ற இளம்பெண்!

இதையடுத்து, தான் அஜித்குமாரை கொலை செய்து விட்டதாகக் கூறி கௌதமி அப்பகுதி காவல்நிலையத்தில் தாமாக முன்வந்து சரண் அடைந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அஜித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இளம்பெண் கௌதயிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை இளம்பெண் வெட்டிக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.