பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சகோதரனை கொலை செய்த தங்கை ! உபியில் அதிர்ச்சி சம்பவம் !!

 

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சகோதரனை கொலை செய்த தங்கை ! உபியில் அதிர்ச்சி சம்பவம் !!

உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை அடுத்து மூத்த சகோதரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 வயது சிறுமி காவல் நிலையத்தை அணுகி தனது சகோதரனைக் கொன்றதற்காக சரணடைந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

தனது சகோதரன் அத்துமீறியபோது எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சிறுமி. ஆனால் வீட்டில் பெற்றோர் இல்லாததை பயன்படுத்தி சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்ய முயன்றபோது சினிமாவில் வரும் காட்சிகள் போல் அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தன் சகோதரனைக் கொன்றாள். இந்த வழக்கில் பதில் தந்துள்ள பெற்றோர் தன்னுடைய மகன் அப்படிப்பட்டவன் அல்ல என தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பெற்றோர் பேலா நகரில் உள்ள தாய்வழி தாத்தாவின் இடத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சகோதரர் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் தன்னை பாதுகாத்துக்கொல்ல அவரை அரிவாளால் தாக்கினார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சகோதரனை கொலை செய்த தங்கை ! உபியில் அதிர்ச்சி சம்பவம் !!

தனது சகோதரனைக் கொன்ற உடனேயே அவர் கொத்வாலி காவல் நிலையம் வரை சென்று குற்றம் குறித்து போலீசார் முன் ஒப்புக்கொண்டார். இதைக் கேட்ட பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
பிரிவு 304 (கொலைக்குரிய குற்றமற்ற கொலைக்கு தண்டனை) குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் இன்னும் வெவ்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகின்றன