“பணமும் தரேன் ,என் உடம்பையும் தரேன்” -காதலனை கொல்ல பெண் பேசிய டீலிங் .

 

“பணமும் தரேன் ,என் உடம்பையும் தரேன்” -காதலனை கொல்ல பெண் பேசிய டீலிங் .


கள்ள காதலியை கல்யாணம் செய்து கொள்ள விடாமல் தடுத்த வாலிபரை அந்த பெண் கூலிப்படையால் கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது

“பணமும் தரேன் ,என் உடம்பையும் தரேன்” -காதலனை கொல்ல பெண் பேசிய டீலிங் .


மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சாந்து மகாபூர் என்ற 30 வயதான நபர் திருமணமானவர் .ஆனால் அவர் திருமணத்திற்கு புறம்பாக 20 வயதான பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தார் .பிறகு அந்த பெண் அவரை விட்டு விலகி வேறொருவரை மணமுடிக்க விரும்பினார் .அதனால் அவர் தன்னுடைய காதலன் சாந்துவிடம் தம்முடைய உறவை முடித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் .ஆனால் அந்த பெண்ணை அவர் விடுவதாக இல்லை .அவர் அந்த பெண்ணுடைய உறவை தொடர விரும்பினார் .அதனால் அந்த பெண்ணும் அவரின் பெற்றோரும் சாந்து மீது கோபப்பட்டனர் .அதனால் அவர் உயிரோடு இருந்தால் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று நினைத்து, அவரை கொள்வதற்கு கூலிப்படையை சேர்ந்த குர்ஜர் என்பவரை நியமித்தார் .
அப்போது அந்த குர்ஜரிடம் அந்த பெண், சாந்துவை கொன்றுவிட்டால் அவருக்கு 1.5 லட்சம் பணமும் ,அவரோடு உடலுறவும் கொல்வதாக கூறினார் .அதற்கு சம்மதித்த குர்ஜார் சாந்துவை கொல்வதற்கு புறப்பட்டார் .பிப்ரவரி 25ம் தேதியன்று சாந்துவை மது அருந்த கூட்டிசென்றார் .அதன் பிறகு மது போதையில் சாந்துவை தலையில் அடித்து கொலை செய்தார் .பின்னர் அவரின் உடலை அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் வீசினார் .பின்னர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து, அங்கிருந்த சிசிடிவி கேமெரா உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது சாந்துவை குர்ஜார் கொலை செய்ததை கண்டறிந்து அவரையும் ,அவரை கொல்ல சொன்ன அவரின் காதலி மற்றும் அவரின் பெற்றோரையும் கைது செய்தனர் .

“பணமும் தரேன் ,என் உடம்பையும் தரேன்” -காதலனை கொல்ல பெண் பேசிய டீலிங் .