திருமணமான 6 மாதத்தில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

 

திருமணமான 6 மாதத்தில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் வசித்து வந்த தம்பதி கருப்பசாமி – பிரபாவதி(25). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று தெரிகிறது. கருப்புசாமி ஐடி ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று அவர் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.

திருமணமான 6 மாதத்தில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

அச்சமயம் பார்த்து பிரபாவதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய கருப்பசாமி, பிரபாவதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து மதுரவாயல் போலீசாருக்கும் பிரபாவதியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பிரபாவதி தைராய்டு பிரச்சினைக்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மன உளைச்சலில் பிரபாவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திருமணமான 6 மாதத்தில் பிரபாவதி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.