குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… ஆர்.டி.ஓ விசாரணை…

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… ஆர்.டி.ஓ விசாரணை…

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷா(22). இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வில்லுக்குறியை அடுத்த மணக்காவிளையை சேர்ந்த ரதீஷ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே ரதீஷ்குமார் மது அருந்திவிட்டு வந்து ஜெனிஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெனிஷா அளித்த புகாரின் பேரில் குளச்சல் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… ஆர்.டி.ஓ விசாரணை…

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரதீஷ் மீண்டும் ஜெனிஷாவை அடுத்து துன்புறுத்தி உள்ளார். இதனால், அவரை பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக ஜெனிஷா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று உறவினர்கள் வெளியே சென்றிருந்தபோது, ஜெனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் வீட்டிற்கு திரும்பியபோது, அவர் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் இரணியல் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், ஜெனிஷா தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.