காதலனுடன் சேர்த்துவைக்கக்கோரிய சிறுமி! ஓட்டுநர் பங்குப்போட்ட கொடூரம்

 

காதலனுடன் சேர்த்துவைக்கக்கோரிய சிறுமி! ஓட்டுநர் பங்குப்போட்ட கொடூரம்

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கால் டாக்சி ஓட்டுநர் மற்றும் காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது லால்குடியைச் சேர்ந்த காதலன் ஏழுமலையுடன் சேர்த்து வைக்குமாறு கால்டாக்சி ஓட்டுநர் சண்முகவேலின் உதவியை சிறுமி நாடியது தெரியவந்தது.

காதலனுடன் சேர்த்துவைக்கக்கோரிய சிறுமி! ஓட்டுநர் பங்குப்போட்ட கொடூரம்

உதவுவதாக கூறி சிறுமியை கடத்திச்சென்ற சண்முகவேல், காரிலேயே பாலியல் வன்கொடுமை செய்து காதலனிடம் ஒப்படைத்துள்ளார். காதலன் ஏழுமலையும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருச்சியிலேயே நிர்கதியாய் விட்டு சென்றார். சிறுமியை மீட்ட கோவை மேற்கு மகளிர் காவல்துறையினர், விசாரணை செய்து ஏழுமலை, சண்முகவேல் இருவரையும் போக்சோவில் கைது செய்தனர்.