ஸ்டாலின் வேப்பிலை கட்டி ஆடினாலும் திமுக இந்து விரோதியே – காயத்ரி ரகுராம்

 

ஸ்டாலின் வேப்பிலை கட்டி ஆடினாலும் திமுக இந்து விரோதியே – காயத்ரி ரகுராம்

ஸ்டாலினே நீங்கள் பாத யாத்திரையே போனாலும் வேப்பிலை கட்டி ஆடினாலும் சரி திமுக இந்துக்களின் விரோதி என்பதை ஒருகாலும் மறக்கமாட்டோம் என பாஜகவின் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வேப்பிலை கட்டி ஆடினாலும் திமுக இந்து விரோதியே – காயத்ரி ரகுராம்

இதுகுறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தினம் ஒரு நாடகம் நடத்தும் ஸ்டாலின் தனது மனைவி துர்காவின் உத்தரவுப்படி ஐ பேக் குழு ஏற்பாட்டில் நாளை தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன் பாளையம் கொங்கு திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்து விபூதி பூசி குங்குமம் இட்டு. பத்திரிகையாளர்கள் முன்பு போஸ் கொடுத்து தான் இந்து விரோதி அல்ல என நாடகமாடி இந்துக்களை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார். ஸ்டாலினே நீங்கள் பாத யாத்திரையே போனாலும் வேப்பிலை கட்டி ஆடினாலும் சரி திமுக இந்துக்களின் விரோதி என்பதை ஒருகாலும் மறக்கமாட்டோம் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் பரமேஸ்வரன் பாளையத்தில் கொங்கு திருப்பதில் கோயிலில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். இக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட ஒன்றிய தலைவர் ஏவி லெனின் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவை ட்விட்டரில் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.