இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

 

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்துள்ளது.

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, சிலிண்டர் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பொருத்தும் மாற்றி அமைக்கப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த மார்ச் மாதம் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த நிலையில், இது சிலிண்டர் விலையில் எதிரொலித்தது. அதாவது கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிலிண்டர் விலை குறைந்தது.

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

இதைத் தொடர்ந்து, ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்ததால் ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் சிலிண்டர் விலை ஏறியது. அதன் பிறகு, சிலிண்டர் விலையில் பெரிதாக ஏதும் மாற்றம் இருக்கவில்லை. இந்த நிலையில், இம்மாதத்திற்கான மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, ரூ.610க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் இனி ரூ.660க்கு விற்கப்படும். மேலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.56.50 உயர்ந்து, ரூ.1410.10க்கு விற்கப்படுகிறது.