கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு : திமுக இன்று ஆர்ப்பாட்டம்!

 

கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு : திமுக இன்று ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக, அதிமுகவுக்கு எதிராக திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு : திமுக இன்று ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் ஆளும் அதிமுக, மத்திய பாஜக அரசின் ஆட்சியில் விலையேற்றம் என்பது உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்விலை ரூ.92.59-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.98-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் வாகன ஓட்டிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.அதேபோல் சமையல் சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆம் தேதி சிலிண்டர் விலையில் ரூ.25 அதிகரித்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு மீண்டும் ரூ.50 உயர்ந்து மொத்த விலை ரூ.785 ஆக விற்பனையாகிறது.அத்துடன் காய்கறிகள் விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் விலை உயர்வை எண்ணி திகைத்து போயுள்ளனர்.

கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு : திமுக இன்று ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் மேற்கொள்கிறது. மாவட்ட தலைநகரங்களில் , அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பாஜக , அதிமுக அரசுகளை கண்டித்து காலை 9 மணிக்கு திமுக ஆர்ப்பாட்டம் செய்கிறது