பைக்கில் கடத்தப்பட்ட 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஒருவர் கைது!

 

பைக்கில் கடத்தப்பட்ட 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஒருவர் கைது!

குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அண்மைக்காலமாக தமிழகத்தில் அதிகளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா கடத்தலில், இளைஞர்கள் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில், கஞ்சா வெளிமாநிலங்களில் இருந்தே தமிழகத்திற்கு சப்ளை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பைக்கில் கடத்தப்பட்ட 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஒருவர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த எஸ். மோட்டூர் கிராமத்தில் வழக்கம் போல போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த நபரை வழிமறித்து போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குடியரசு என்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.