“ஐந்து பேருக்கு அப்புறம் ஆறாவதா ஒரு போலீசும் என்னை ..”சப் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகாரளித்த பெண்.

 

“ஐந்து பேருக்கு அப்புறம் ஆறாவதா ஒரு போலீசும் என்னை ..”சப் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகாரளித்த பெண்.


ஐந்து பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது அங்குள்ள சப் இன்ஸ்பெக்டரால் பலாத்காரம் செயப்பட்டதாக புகார் கூறியுள்ளார் .


உத்தரபிரதேசத்தின் ஜலால்பூரில் வசிக்கும் ஒரு 35 வயதான பெண் கடந்த நவம்பர் 30 ஆம் தேதியன்று ஷாஜகான்பூரருக்கு போய் விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு காரில் அவர் அருகே வந்துள்ளது .பிறகு அந்த கும்பல் அந்த பெண்ணை அவர்களின் காரில் இழுத்து சென்று அருகிலுள்ள ஒரு வயல்வெளியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.அதன் பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்த பெண் அருகிலுள்ள ஜலால்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார் .
அப்போது அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அந்த பெண் தனக்கு ஐந்து பேரால் நடந்த பாலியல் கொடுமை பற்றி கூறியுள்ளார் .ஆனால் அந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் புகாரை பதிவு செய்யமல் அங்குள்ள ஒரு அறைக்குள் அந்த பெண்ணை இழுத்து சென்று அவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தாராம் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் செய்தியாளர்களை சந்தித்து இந்த சப் இன்ஸபெக்டர் செய்த பலாத்கார சமபவத்தை பற்றி கூறினார் .
இது பற்றி கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரி பிரம்மபால் சிங், இது குறித்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அந்தப் பெண் சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

“ஐந்து பேருக்கு அப்புறம் ஆறாவதா ஒரு போலீசும் என்னை ..”சப் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகாரளித்த பெண்.