பச்சிளங் குழந்தைகளை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற கும்பல் : வளைத்து பிடித்த போலீசார்!

 

பச்சிளங் குழந்தைகளை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற கும்பல் : வளைத்து பிடித்த போலீசார்!

மும்பையில் குழந்தைகளை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த 9 பேர், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் புதிய பெற்றோர்களை அணுகி அவர்களுக்கு பணம் தருவதாகக் கூறி அவர்களது குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இது குறித்து மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், அந்த நபர்கள் வசித்து வந்த இடத்திற்கு சென்ற போலீசார் 9 பேரையும் கைது செய்துள்ளனர்.

பச்சிளங் குழந்தைகளை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற கும்பல் : வளைத்து பிடித்த போலீசார்!

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய பெற்றோர்களிடம் இருந்து குழந்தையை தத்தெடுத்து வேறோருவரிடம் ரூ.60 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமானது. புதிய பெற்றோர்கள் குறித்து அந்த கும்பலுக்கு தகவல் கொடுத்து வந்த மருத்துவரின் லீலைகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து கைதான மருத்துவர் உட்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பிடிபட்டதால் குழந்தை விற்பனை செய்யப்படுவிருந்த திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், இதற்கு முன்னர் இதே போல எத்தனை குழந்தைகளை விற்பனை செய்திருக்கிறார்கள் என விசாரணை தொடருகிறது.