7 மாதங்களுக்கு பிறகு காந்தி மார்க்கெட் திறப்பு : வியாபாரிகள் கொண்டாட்டம்!

 

7 மாதங்களுக்கு பிறகு காந்தி மார்க்கெட் திறப்பு : வியாபாரிகள் கொண்டாட்டம்!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மொத்தமாக சுமார் 3000 கடைகளுக்கு மேல் இயங்கி வந்தன. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் மார்க்கெட் மூடப்பட்ட நிலையில், பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடக்கோரி திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

7 மாதங்களுக்கு பிறகு காந்தி மார்க்கெட் திறப்பு : வியாபாரிகள் கொண்டாட்டம்!

இந்த உத்தரவை எதிர்த்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது, காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில், 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் காந்தி மார்க்கெட்டை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கிடைத்ததால் வியாபாரிகள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.