“தமிழ்நாட்டிற்கு முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு”

 

“தமிழ்நாட்டிற்கு முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு”

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது பாதிப்பு எண்ணிக்கை. படிப்படியாக உயிரிழப்பும் அதிகரிக்கிறது. இச்சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நாளை முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலினிடம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோரி பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுக்கின்றனர்.

“தமிழ்நாட்டிற்கு முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு”

தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவச் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் விடுத்துள்ள அறிக்கையில், “தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் இல்லாததால் சிகிச்சையில் அவர்களின் பங்களிப்பு குறைந்துவிட்டது. தொற்றை கையாள முழு முடக்கம் ஒன்றே வழி. முழு முடக்கத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். முழு முடக்க காலத்தை ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த, ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த, ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

“தமிழ்நாட்டிற்கு முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு”

தற்போது நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கைகள் போதுமானதாக இல்லை. நோயாளிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டிலுள்ள 18 ஆயிரம் அரசு டாக்டர்களின் கோரிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.