புதுச்சேரியில் வெள்ளி முதல் திங்கள் வரை முழு ஊரடங்கு

 

புதுச்சேரியில் வெள்ளி முதல் திங்கள் வரை முழு ஊரடங்கு

புதுச்சேரியில் இரவு 10 மணிவரை மதுபானக் கடைகள் இயங்க அம்மாநில கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு. முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் 2 மணிக்கு பின் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்.

புதுச்சேரியில் வெள்ளி முதல் திங்கள் வரை முழு ஊரடங்கு

புதுச்சேரியில் இரவு 10 மணிவரை மதுபானக் கடைகள் இயங்கலாம். பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. புதுச்சேரியில் உள்ள வழிபாட்டு தலங்களில் தேரோட்டம் போன்றவற்றிற்கு தடை. வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளுடன் வழிபாடு செய்ய மட்டும் அனுமதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.