முதல்வரின் காப்பீடு அட்டை இருக்கா? அப்ப தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டாம்!

 

முதல்வரின் காப்பீடு அட்டை இருக்கா? அப்ப தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டாம்!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகப் பிரிவு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதில், கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கலாம் என்றும் 10 நாளுக்கு ரூ. 2,31,870 வரை வசூலிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தால் ஒரு நாளைக்கு 2,31,870 வசூலிக்கலாம் என்றும் 17 நாட்களுக்கு ரூ. 4,31,411 வரை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முதல்வரின் காப்பீடு அட்டை இருக்கா? அப்ப தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டாம்!

முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளில் எந்த கட்டணம் செலுத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகையை செலுத்தக் கோரினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனைகள் மீது முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் விபரங்கள் மற்றும் புகார்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் காப்பீடு அட்டை இருக்கா? அப்ப தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வேண்டாம்!
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம். அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள்ஒன்றுக்கு அதிகபட்சம் 15,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது, மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளாது, இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்து பயன் பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.